கலைஞர் நகர் பகுதியில் பிளேடால் கழுத்து அறுத்து சுத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வாலிபர் உயிரிழப்பு

கலைஞர் நகர் பகுதியில் பிளேடால் கழுத்து அறுத்து சுத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வாலிபர் உயிரிழப்பு;

Update: 2025-03-05 06:01 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கலைஞர் நகர் பகுதியில் பிளேடால் கழுத்து அறுத்து சுத்தியால் தாக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த வாலிபர் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் மகன் ஆனந்தராஜ் (38) இவருக்கு துளசி என்ற பெண்ணுடன் திருமணமாகி ஒரு பெண் ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. இவர் கடந்த ஒன்றாம் தேதி இரவு தெருவில அமர்ந்து குடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் அந்த வழியாக வந்த மர்ம நபர் தன் வைத்திருந்த பிளேடால் கழுத்து மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் ‌சரா மாறியாக ஆனந்தராஜை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்னர் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர் இந்தநிலையில் அவருடைய உறவினரான குமார் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை மேற்கொண்டபோது சிலம்பு என்பவர் தன்னை கழுத்தில் பிளேடால் அறுத்து சுத்தியல் கொலை வெறி தாக்குதல் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் காரணமாக திருப்பத்தூர் நகர போலீசார் தலைமுறைவாக இருந்த சிலம்பவை நேற்று கைது செய்து மேஜிஸ்ட்ரேட் முன்பு நிறுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் சிகிச்சையில் இருந்த ஆனந்தராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Similar News