சாலையோரம் நிறுத்தப்படும் வாகனங்களால் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து அபாயம்
சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள்நிறுத்துவதை தடுக்க வேண்டும் என கோரிக்கை;
சென்னை - பெங்களூரு இடையே, ஆறுவழிச்சாலை விரிவுபடுத்தும் பணியை, தேசிய நெடுஞ்சாலை துறையினர் செய்து வருகின்றனர்.இந்த சாலை வழியாக,பெங்களூரு, ஒசூர், வேலுார் ஆகிய பகுதி களில் இருந்து, சென்னை நோக்கி செல்லும்வாகனங்கள் மற்றும் சென்னையில் இருந்து வேலுார், பெங்களூரு, ஒசூர் நோக்கி செல்லும் வாகனங்கள் வெள்ளைகேட் மேம்பாலம் வழியாக கடந்து செல்கின்றன. இதனால், பெங்களூரு, மைசூரு, ஒசூர், வேலுார்ஆகிய பகுதிகளில் இருந்து, சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், வெள்ளை கேட் மேம்பாலம்அருகே விபத்தில் சிக்கும்அபாயம் ஏற்பட்டுஉள்ளது. எனவே, சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்கள்நிறுத்துவதை தவிர்க்கசம்பந்தப்பட்ட துறையினர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.