கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரம்மோற்சவ விழா பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதி உலா

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரம்மோற்சவ விழா பஞ்சமூர்த்திகள் சுவாமி வீதி உலா நடைபெற்றது.;

Update: 2025-03-06 12:20 GMT
ஜெயங்கொண்டம் ,மார்ச்.7- ஜெயங்கொண்டம் அருகில் உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலய மாசி மக பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் சுவாமி வீதி உலா நடைபெற்றது இந்த மாசி திருவிழாவானது கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வருகின்ற 10ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள யுனெஸ்கோவால் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் 9  ஆம் ஆண்டு மாசி மக திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.  கோயில் வளாகத்தில் உள்ள  சுமார் 40 அடி உயரமுள்ள கொடிமரத்துக்கு மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் 8 நாட்கள் சிறப்பு யாகசாலை பூஜைகள், சிறப்பு அபிஷேகம், சுவாமி வீதி உலா நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து வருகின்ற 9 ஆம் தேதி திருக்கல்யாணமும், 11ஆம் தேதி ஒன்பதாம் நாள் காலை 6 மணிக்கு திருத்தேர் பவனியும் சுவாமி கோவிலுக்கு வருதல் ஆகிய நிகழ்ச்சிகள்  நடைபெற உள்ளது. 10 ஆம் நாள் 12 ஆம் தேதி தீர்த்தவாரி, யாகசாலை கலசங்கள் அபிஷேகம் மேலும் கொடி இறக்கமும்  சீரும் சிறப்புமாக நடைபெற உள்ளது.அதனைத் தொடர்ந்து விழா தொடக்கத்திலிருந்து ஒவ்வொரு நாளும் யாகசாலை பூஜைகள் மாலை சுவாமி வீதி உலா , நடைபெறுகிறது. பிரகதீஸ்வரர் வழிபாட்டு குழுமம் சார்பில் அம்பாள் உஸ்சவம், சண்டிகேஸ்வரர் உஸ்சவம், பிரமோற்சவம் உள்ளிட்டவை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் சார்பில் நடைபெற உள்ளது.இந்த கொடியேற்று விழாவில் கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் அதனை சுற்றுவட்டாரத்தில் இருந்து கிராம பொதுமக்கள் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். விழாவை முன்னிட்டு நேற்று விநாயகர், வள்ளி தெய்வானை, பிரகதீஸ்வரர், பிரகன்நாயகி, சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் வீதி உலாவும் நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Similar News