தேனி, வீரப்ப அய்யனார் கோவில் மலையடிவாரத்தில் 5,000 ஏக்கர் பரப்பளவில் உள்ள பட்டா நிலங்களில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மலைப் பகுதியில் வறட்சியால் தண்ணீர் கிடைக்காமல் கடந்த சில வாரங்களாக காட்டு மாடுகள் அப்பகுதியில் உள்ள மாந்தோப்புக்குள் புகுந்து மரங்களை சேதப்படுத்தி வருகின்றன. இதற்கு வனத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்