கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் ராம்குமார் (39). இவர் கடந்த ஏழு மாதமாக கடமலைக்குண்டு பகுதியில் தங்கியிருந்து வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு குடிப்பழக்கம் அதிகம் இருந்த நிலையில் நேற்று முன்தினம் (மார்.4) இரவு குடித்துவிட்டு அப்பகுதியில் உள்ள ஓட்டல் முன்பாக இறந்த நிலையில் கிடந்துள்ளார். தகவல் அறிந்த கடமலைக்குண்டு போலீசார் உடலை கைப்பற்றிய நிலையில் இது குறித்து நேற்று (மார்.5) வழக்கு பதிவு.