பராமரிப்பு பணி காரணமாக ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில்கள் பகுதி ரத்து

ரெயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு;

Update: 2025-03-07 03:21 GMT
ஜோலார்பேட்டையில் சிக்னலின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதையொட்டி ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்து ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஈரோட்டில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ஈரோடு -ஜோலார்பேட்டை ரெயில் (56108) நாளை 8 மற்றும் 9,11,15, 16 ஆகிய தேதிகளில் திருப்பத்தூர் - ஜோலார்பேட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூருக்கு மட்டும் இயக்கப்படும். இதேபோல் ஜோலார்பேட்டையில் இருந்து மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ஜோலார்பேட்டை - ஈரோடு ரெயில் (56107) நாளை 8 ந்தேதி மற்றும் 9,11,15,16 ஆகிய தேதிகளில் ஜோலார்பேட்டை - திருப்பத்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் திருப்பத்தூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News