திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழாவில் பொதுப்பணி துறை அமைச்சர் பங்கேற்ப்பு

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கிய அமைச்சர்;

Update: 2025-03-08 09:06 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் உலக மகளிர் தினவிழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு பங்கேற்று 464 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 6253 பயனாளிகளுக்கு 45 கோடியே 35லட்சம் ரூபாய் வங்கி கடன் உதவி வழங்கி சிறப்பித்தார் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னையில் நடைபெற்ற காணொளி காட்சியின் வாயிலாக அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில் மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூர் அடுத்த பால்னாங்குப்பம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏவ வேலு பங்கேற்று 464 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 6253 பயனாளிகளுக்கு 45 கோடியே .35 லட்சம் வங்கி கடன் வழங்கி சிறப்பித்தார். இதில் பேசிய அமைச்சர் மகளிருக்காக பல்வேறு திட்டங்களை அரசு செய்து வருகிறது. பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகிறார்கள். அவர்களுக்கு வங்கியின் மூலமாக கடனுதவி வழங்கப்படுகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை மற்றும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சூரியகுமார் மற்றும் ஒன்றிய தலைவர்கள், ஊராட்சி பிரதிநிதிகள் மற்றும் சுய உதவி குழுக்களை சார்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

Similar News