சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் கிராமத்தில், தாகூர் பள்ளி ஆண்டு விழா நடந்தது. ஆவின் சேர்மன் ஆறுமுகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா வீரமணி முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார்.அ.பாண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பாப்பாத்தி, துணை தலைவர் புஷ்பா, மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு செந்தில்குமார் பரிசு வழங்கினார். நிர்வாகி அமுதா கார்த்திகேயன் நன்றி கூறினார்.