அரக்கோணம் ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி!
ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவர் பலி!;
அரக்கோணம் ரயில் நிலைய 4-வது பிளாட்பாரத்தில் கடந்த 5-ந் தேதி 58 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தலையில் போட்டப்பட்டிருந்த கட்டிலில் இருந்து ரத்தம் கசிந்து மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு திருவள் ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப் பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.