சேலம் சீலநாயக்கன்பட்டி ராமையன் காடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 27). தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தாதகாப்பட்டி மூணாங்கரட்டை சேர்ந்த குணசேகரன் (27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.