கணவனை பிரிந்த சோகத்தில் மனைவி விபரீத முடிவு
திருப்புவனம் அருகே கணவனை பிரிந்து தந்தை வீட்டில் வாழ்ந்து வந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்;
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பசியாபுரத்தைச் சேர்ந்த ஆறுமுகம்(70) இவரது மகள் சுமதி(43). இவர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது மகள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது கணவரையும் பிரிந்து மகளும் பிரிந்து சென்றதால் மன வேதனையில் இருந்த சுமதி(43) எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆறுமுகம்(70) கொடுத்த புகாரின் பெயரில் திருப்புவனம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.