
குமரி மாவட்டம் அதங்கோடு ஆனந்தநகர் மாயகிருஷ்ண சுவாமி கோயில் 100-வது ஆண்டு ரோகிணி திருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 9-ம் திருவிழாவான நேற்று சிறப்பு பூஜைகள், கலச பூஜை, கலச அபிஷேகம் அதனைத் தொடர்ந்து , தங்க வாகனத்தில் மாயா கிருஷ்ணசாமியும், அலங்கார வாகனத்தில் ஸ்ரீ சாமுண்டீஸ்வரி தேவியும் , ஸ்ரீ புவனேஸ்வரி தேவியும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்ற முக்கிய நிகழ்வும் நடைபெற்றது . ஊர்வலம் முக்கிய வீதிகளான ஆனந்த நகர், தேவி நகர் ,படர்ந்தாலுமூடு, குழித்துறை,ஈத்தவிளை மடிச்சல் வழியாக கோயில் சன்னதியில் வந்தடைந்தது . விழாவில் வழி நடக்க ஊர்வலத்திற்கு பக்தர்கள் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் வழங்கியும் வழி நடக்க பக்தர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இரவு மாபெரும் வானவேடிக்கையும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலய தலைவர் சசிகுமார், செயலாளர் சதீஷ், பொருளாளர் ராஜு மற்றும் ஆலய திருவிழா குழுவினர் பக்தர்கள் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.