அரக்கோணம் அருகே பெயிண்டர் மயங்கி விழுந்து பலி!
அரக்கோணம் அருகே பெயிண்டர் மயங்கி விழுந்து பலி!;

அரக்கோணம் அருகே அம்மனூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 61), பெயிண்டர். இவர் அரக்கோணம் அருகே பருத்திபுத்தூர் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று மாலை பெயிண்டிங் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.