புளிய மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு

மதுரை பேலஸ் ரோட்டில் புளிய மரம் சாய்ந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது;

Update: 2025-03-20 05:00 GMT
மதுரை கீழவாசல் பேலஸ் ரோட்டில் உள்ள திருமலை நாயக்கர் மஹால் முன்பாக இன்று (மார்ச் .20)அதிகாலை 6 மணி அளவில் பெரிய புளிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. நல்வாய்ப்பாக வாகனங்களுக்கு சேதமோ யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மரங்களை அப்புறப்படுத்தினார்கள். இதனால் அந்த சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு போக்குவரத்து மாற்றி விடப்பட்டது.

Similar News