கீரமங்கலம் அருகே பைக் சைக்கிளில் மோதி விபத்து: ஒருவர் காயம்
விபத்து செய்திகள்;
புதுகை, கீரமங்கலம் அடுத்த காமராஜபுரத்தைச் சேர்ந்த அண்ணாதுரை (55) என்பவர் தனது வீட்டிலிருந்து கீரமங்கலத்திற்கு சைக்கிளில் சென்றார். அப்போது வள்ளுவர்மன்றம் பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் அண்ணாதுரைக்கு காயம் ஏற்பட்டு புதுகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவரது மகள் அபர்ணா (32) அளித்த புகாரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை.