வளம் மீட்பு பூங்காவில் ஆட்சியர் ஆய்வு
வளம் மீட்பு பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்;
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே, நெற்குப்பை பேரூராட்சிக்குட்பட்ட வளம் மீட்பு பூங்காவில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பெறப்படும் குப்பைகளை தரம் பிரித்து, உரமாக்குதல் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், ஆய்வு மேற்கொண்டார். உடன் பேரூராட்சி துணைத் தலைவர் கண்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் பசலிக்கா ஜான்சி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்