சங்கரன்கோவிலில் வணிகவரித்துறை அலுவலகம் விரைவில் திறப்பு
வணிகவரித்துறை அலுவலகம் விரைவில் திறப்பு;
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வணிகவரித்துறை அலுவலகம் கோவில்பட்டி சாலையில் புதிதாக கட்டப்பட்டு பணிகள் முழுமையாக முடிவடைந்து. இதில் ஒரு சில பணிகள் மற்றும் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் அந்த வணிகவரித்துறை அலுவலக கட்டடம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அந்தப் பகுதி பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.