திருவேங்கடத்தில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு;

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில் பேரூராட்சி பகுதிகளிலும் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்தது. மழை நீர் செல்ல சாக்கடை வசதி இல்லாததால் மழை வெள்ளம் குருவிகுளம் மெயின் ரோட்டில் தேங்கி நின்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.உடனே சம்பந்தப்பட்ட அதிகாரி உடனே வந்து பார்வையிட்டு மழை நீரை அப்புறப்படுத்த தர வேண்டும் என இன்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.