மழை வேண்டி மீன்பிடி திருவிழா

சிங்கம்புணரி அருகே மழை வேண்டி மீன்பிடி திருவிழா நடத்திய கிராம மக்கள்;

Update: 2025-03-21 06:24 GMT
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே கோவில்பட்டி கிராமத்தில் உள்ள கோவில் கண்மாயில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி பாரம்பரிய மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. முன்னதாக கண்மாயில் உள்ள நாட்டு மற்றும் வளர்ப்பு மீன்களை பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் மீன்பிடி திருவிழா குறித்து அறிவிப்பு செய்தனர். இதனை தொடர்ந்து சிங்கம்புணரி, வேங்கை பட்டி, பிரான்மலை, வையாபுரிபட்டி போன்ற சுற்று வட்டார கிராமங்களில் இருந்து வருகை தந்த கிராம மக்கள் தாங்கள் தயராக வைத்திருந்த ஊத்தா கூடை ,கச்சா , கொசுவலை, அரிவலை உள்ளிட்ட உபகரணங்களை கொண்டு மீன்பிடிக்க காத்திருந்தனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க மடைக்கு மாலை அணிவித்து, சாமி கும்பிட்டு, துண்டு வீசி, மீன்பிடிக்க அனுமதி கிடைத்தவுடன், மின்னல் வேகத்தில் ஊத்தா கூடையுடன் ஒடி சென்று கண்மாயில் துள்ளி குதித்த மீன்களை போட்டி போட்டு பிடித்தனர். இதில் விரா, கட்லா, கெண்டை உள்ளிட்ட மீன்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சியுடன் சென்றனர்

Similar News