கோவை: சாலை விபத்தில் வாலிபர் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம் !

சாலை விபத்தில் உயிரிழந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-03-22 01:04 GMT
கோவை: சாலை விபத்தில் வாலிபர் மூளைச்சாவு- உடல் உறுப்புகள் தானம் !
  • whatsapp icon
திருப்பூர் மாவட்டம், வெள்ளியம்பதி, ஸ்ரீ அம்மன் நகர் பகுதியைச் சேர்ந்த திருநாவுக்கரசு - தனலட்சுமி தம்பதியரின் மகன் ராம்தர்ஷன் (20). இவர் கடந்த 19-ம் தேதி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக கார் - பைக் மோதிய விபத்தில் படுகாயமடைந்தார். இதையடுத்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி ராம்தர்ஷன் மூளைச்சாவு அடைந்தது உறுதி செய்யப்பட்டது. ராம்தர்ஷனின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதன்படி, ராம்தர்ஷனின் கல்லீரல், 2 சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானம் செய்யப்பட்டன. ஒரு சிறுநீரகம் மற்றும் கண்கள் கோவை அரசு மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் சேலம் அரசு மருத்துவமனைக்கும், கல்லீரல் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் மாற்று அறுவை சிகிச்சைக்காக நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. ராம்தர்ஷனின் உயரிய உடல் உறுப்பு தானத்திற்கு, மருத்துவமனை நிர்வாகம் சார்பில் முதல்வர் மற்றும் மருத்துவர்கள், ஊழியர்கள் குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர். மேலும், ராம்தர்ஷனின் உடலுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Similar News