குடிநீர் பிடிப்பதில் தகராறு: பெண்ணை தாக்கிய தம்பதி கைது

போலீசார் நடவடிக்கை;

Update: 2025-03-22 04:23 GMT
சேலம் அம்மாபேட்டை ராமலிங்கம் தெருவை சேர்ந்தவர் கவுரி (வயது 37). இவர் அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். குடிநீர் பிடிப்பது தொடர்பாக அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அரசு (66) மற்றும் அவருடைய மனைவி ராஜேஸ்வரி (65) ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்கள் கவுரியை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பெண்ணை தாக்கியதாக அரசு, ராஜேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Similar News