கட்டிடத்திலிருந்து விழுந்து தொழிலாளி பலி

கன்னியாகுமரி;

Update: 2025-03-22 13:54 GMT
நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் சூசை மரியான் வயது (70). சென்ட்ரிங் வேலை செய்து வந்துள்ளார். இவர் நேற்று கன்னியாகுமரி அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியின் புதிதாக கட்டி வரும் தங்கும் விடுதியில் சென்ட்ரிங் வேலை செய்து கொண்டிருக்கும்போது கட்டிடத்தின் மாடியில் இருந்து கால் தவறி கீழே விழுந்துள்ளார்.       இதில்  அவர் சம்பவ இடத்தில்  இறந்தார்.  இதையடுத்து தென்தாமரைகுளம் போலீசாருக்கும், அவரது உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.   போலீசார் அவரது உடலை கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் படி போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News