தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர் கைது!

வேலூர் மாவட்டத்தில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2025-03-22 14:54 GMT
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில், தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த எதிரி, மகேந்திரன், வ/29, த/பெ.ஆறுமுகம், வி.மேட்டூர், குடியாத்தம் என்பவர் மீது, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் பரிந்துரையின் பேரில், மாவட்ட ஆட்சியர் வே.இரா.சுப்புலெட்சுமி எதிரியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து,சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவு ஆணையை பிறப்பித்துள்ளார்.

Similar News