
குமரி மாவட்டம் கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் மைதீன் அடிமை (47) இவர் கருங்கல்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டின் வெளியே படுத்து உறங்கி உள்ளார். இரவு 11.00 மணி அளவில் வீட்டுக்கு வெளியே அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதை எடுத்து மனைவி மற்றும் மகன், மருமகள் வெளியே வந்து பார்த்தபோது மைதீன் அடிமை கயிறு மூலம் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனே அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் மைதீன் அடிமை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார்கள். இது குறித்து மைதீன் அடிமை மனைவி முனீரா (45) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.