மதம் மாற்ற முயற்சி - இருவர் காவல் நிலையத்தில் ஒப்படைப்பு

சிவகங்கையில் மதம் மாற்ற முயற்சித்ததாக இருவரை பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்;

Update: 2025-03-24 09:58 GMT
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை அருகே இலந்தகுடிப்பட்டியில் இருவர் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து மதமாற்றம் செய்ய முயற்சி செய்ததாகக் கூறி, அப்பகுதியைச் சேர்ந்த சிவகங்கை பாஜக நகர பொதுச்செயலாளர் பாலா மற்றும் இளைஞர்கள் இருவரைபிடித்து சிவகங்கை நகர் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Similar News