பத்து மாதங்களாக தொழில்நுட்பக் கோளாறால் முடங்கிய மின் உற்பத்தி மே மாதம் துவக்கம்
அத்திப்பட்டு வடசென்னை மூன்றாவது அனல் மின் மின் நிலையத்தில் கடந்த 10 மாதங்களாக தொழில்நுட்ப கோளாறி னால் முடங்கிய மின் உற்பத்தி வருகிற மே மாதம் முதல் வணிக மின் உற்பத்தியை துவக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.;
திருவள்ளூர் : அத்திப்பட்டு வடசென்னை மூன்றாவது அனல் மின் மின் நிலையத்தில் கடந்த 10 மாதங்களாக தொழில்நுட்ப கோளாறி னால் முடங்கிய மின் உற்பத்தி வருகிற மே மாதம் முதல் வணிக மின் உற்பத்தியை துவக்கும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. வடசென்னை மூன்றாவது அனல் மின் நிலையத்தில் வரும் மே மாதம் முதல் வணிகப் பயன்பாட்டிற்கான மின் உற்பத்தி தொடங்கப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டி ரூபாய் 10,158 கோடி செலவில் நான் ஒரு மெகா திறனில் வடசென்னை மூன்றாவது அனல் மின் நிலைய கட்டுமான பணிகள் கடந்த 2016 இல் தொடங்கியது பணிகள் முடிக்கப்பட்டு 2024 மார்ச் 7 சோதனை ரீதியிலான மின் உற்பத்தி தொடங்கி நடைபெற்றது மின் உற்பத்தி தொடங்கியதிலிருந்து தொடர்ந்து 72 மணி நேரம் மின் உற்பத்தி பணிகள் நடைபெற்றன. அதன்பின் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தான் வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு வந்ததாக அறிவிக்கப்படும் இந்த நிலையில் கடந்த 2024 ஜூன் 27ஆம் தேதியிலிருந்து முழு திறனில் மின் உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக மீண்டும் மின் உற்பத்தி குறைக்கப்படுது. இதனால் இன்னும் அந்த மின் நிலையத்திலிருந்து வணிகப் பயன்பாட்டிற்கான மின்சார உற்பத்தி செய்யப்படவில்லை இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கையில் வட சென்னை மூன்றாவது அனல் மின் நிலையத்தின் மின் உற்பத்தி தொடங்கிய பின்பு பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டன வணிக மின் உற்பத்தி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மே மாதம் முதல் வணிக மின் உற்பத்தி நடைபெறும் என தெரிவித்துள்ளனர்