மேட்டுப்பாளையம்: வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது !

வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்ட ஐந்து பேர் கைது.;

Update: 2025-03-25 09:18 GMT
மேட்டுப்பாளையம்: வழிப்பறிக் கொள்ளையர்கள் கைது !
  • whatsapp icon
மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சின்ன காமன் மற்றும் காவல்துறையினர் சிறுமுகை சாலையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சிறுமுகை சாலையில் இருந்து அன்னூர் செல்லும் சாலையில் உள்ள கருப்பராயன் குட்டை அருகே 5 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால், காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சச்சின் என்ற நவீன்குமார் (19 வயது), திலீப் (19 வயது), கௌரிசங்கர் (22 வயது), விக்னேஷ் (19 வயது) மற்றும் சேகர் என்ற நாய் சேகர் (32 வயது) என்பது தெரியவந்தது. அவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும், அவர்கள் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. காவல்துறையினர் அவர்கள் ஐந்து பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News