மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார். ---

மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள மதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார். ---;

Update: 2025-03-26 17:36 GMT
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக்குழுவின் மூலம் அமைக்கப்பட்டுள்ள விருமதி உணவகம் மற்றும் பல்பொருள் அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் திறந்து வைத்தார். பின்னர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில், 12 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13 இலட்சம் சமூக முதலீட்டு நிதிக்கான கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் வழங்கினார்.

Similar News