சேலம் அருகே விபத்தில் முதியவர் சாவு

போலீசார் விசாரணை;

Update: 2025-03-27 05:22 GMT
சேலம் அருகே விபத்தில் முதியவர் சாவு
  • whatsapp icon
சேலம் பூலாவரி பகுதி புஞ்சை காட்டை சேர்ந்தவர் பெருமாள் (வயது 65). இவர் சேலத்தில் இருந்து மொபட்டில் ஊருக்கு சென்றார். கொண்டலாம்பட்டி அருகே அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பெருமாள் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து கொண்டலாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News