டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் கடை வாசலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்*

டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் கடை வாசலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்*;

Update: 2025-03-27 17:43 GMT
அருப்புக்கோட்டையில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன் கடை வாசலில் முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கரை ஒட்டிய பாஜகவினர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர் தமிழக முழுவதும் பாஜகவினர் டாஸ்மாக் மதுபான கடைகளில் ஸ்டிக்கர் ஒட்டி வருகின்றனர் போலீசார் அவர்களை கைது செய்து வரும் நடவடிக்கையும் தொடர்ந்து வருகிறது.‌‌ இந்நிலையில் இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மதுரை சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை முன்பு இன்று காலையிலேயே பாஜகவினர் குவிந்தனர். கடை திறப்பதற்கு முன் மாவட்டத் துணைத் தலைவர் ராஜேஸ்வரி தலைமையில் மாவட்ட பொது செயலாளர் சீதாராமன் முன்னிலையில் பாஜகவினர் திடீரென தாங்கள் கொண்டு வந்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின் ஸ்டிக்கரை கடை முன்பு ஓட்டினர். அப்போது திமுக அரசுக்கு எதிராக பாஜகவினர் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது அங்கு விரைந்து வந்த நகர் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் மதுபான கடை முன்பு ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினரை கைது செய்தனர்.

Similar News