வஞ்சிலியம்மன் கோவில் தெருவில் தந்தையின் இறுதி காரியத்தில் பங்கேற்க வந்த மகள் மயங்கி விழுந்து உயிரிழப்பு.

வஞ்சிலியம்மன் கோவில் தெருவில் தந்தையின் இறுதி காரியத்தில் பங்கேற்க வந்த மகள் மயங்கி விழுந்து உயிரிழப்பு.;

Update: 2025-03-30 13:09 GMT
  • whatsapp icon
வஞ்சிலியம்மன் கோவில் தெருவில் தந்தையின் இறுதி காரியத்தில் பங்கேற்க வந்த மகள் மயங்கி விழுந்து உயிரிழப்பு. கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ராஜாராம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவண பிரபு மனைவி மஞ்சுலக்ஷ்மி வயது 35. இவரது தந்தை காலமாகி விட்டதால் அவரது இறுதி காரியத்தில் பங்கேற்ப்பதற்காக மார்ச் 28ஆம் தேதி மாலை 5:30 மணி அளவில், கரூர் வஞ்சிலியம்மன் கோவில் தெருவில் உள்ள தந்தையின் வீட்டிற்கு வந்துள்ளார். தந்தையின் உடலை பார்த்த துக்கம் தாளாமல் அப்பகுதியில் உள்ள முருகன் என்பவரது வீட்டின் அருகே மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த பட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மஞ்சுலட்சுமியின் கணவர் சரவணபிரபு வயது 37 என்பவர் இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், உயிரிழந்த மஞ்சுலட்சுமி உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News