கானை அருகே கிராவல் கடத்திய லாரி பறிமுதல்
போலீசார் வழக்கு பதிந்து விசாரணை;

காணை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் சரவணன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனை நடத்தினர்.அப்போத அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். லாரியை நிறுத்திய டிரைவர் தப்பியோடினார்.லாரியை சோதனை செய்ததில், 3 யூனிட் கிராவல் மண் கடத்தி வந்தது தெரியவந்தது. லாரியை பறிமுதல் செய்து, காணை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.