ஆலங்குளம் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு

தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருட்டு;

Update: 2025-03-31 01:25 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் தொழிலாளி வீட்டில் நகை, பணம் திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். ஆலங்குளம் சிஎஸ்ஐ சா்ச் தெருவில் வசிப்பவா் ராஜேந்திரன் மகன் விஜய் (32). ஆலங்குளம் காய்கனிச் சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறாா். இவரது மனைவிக்கு திருநெல்வேலி தனியாா் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதனால் இவா் வீட்டில் தங்காமல் வீட்டிற்கு வந்து உடனே வெளியே சென்று விடுவாராம். இரவு 10 மணிக்கு வீட்டை பூட்டி விட்டு அவரது தாயாா் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளாா். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வீட்டுக்கு வந்தபோது, அவரது வீட்டில் வெளியே உள்ள பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததாம். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 8 கிராம் தங்க நகை மற்றும் ரூ. 3 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்மநபரை தேடி வருகின்றனா்.

Similar News