இளம் பெண் மாயம்

மதுரை உசிலம்பட்டி அருகே இளம் பெண் மாயம் என புகார் அளிக்கப்பட்டுள்ளது;

Update: 2025-03-31 12:05 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வி ஒத்தப்பட்டி ஏ போத்தம்பட்டி பகுதியில் வசிக்கும் சின்ன பாண்டியின் 17 வயது மகள் மதுரை சாலையில் உள்ள தனியார் மோட்டார் கம்பெனி நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன்தினம் (மார்ச் .29) வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரை பல இடங்களில் தேடியும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை என்பதால் நேற்று( மார்ச் .30) அவரது தாய் அன்பரசி உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை தேடி வருகிறார்கள்.

Similar News