விஷம் குடித்தவர் உயிரிழப்பு.
மதுரை உசிலம்பட்டி அருகே விஷம் குடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.;
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி காரையன்பட்டியை வசிக்கும் வெள்ளையாணை என்பவரின் மகன் சத்யராஜ்( 38) என்பவருக்கு பல வருடங்களாக வயிறு வலி இருந்துள்ளது . இதற்கு நாட்டு மருந்து சாப்பிட்டு வந்துள்ளார். இருப்பினும் நேற்று முன்தினம் (மார்ச்.30). வயிறு வலி பொறுக்க முடியாமல் வீட்டில் இருந்த பூச்சி மருந்தினை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். அவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து உத்தப்பநாயக்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.