கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

மதுரை திருமங்கலம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.;

Update: 2025-04-02 02:43 GMT
கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து
  • whatsapp icon
பொள்ளாச்சியிலிருந்து துாத்துக்குடி துறைமுகத்திற்கு, தேங்காய் நார் பொருட்களை ஏற்றிய கன்டெய்னர் லாரி நேற்று (ஏப்.1)காலை திருமங்கலம் கப்பலுார் மேம்பாலத்தில் மாட்டுத்தாவணி ரிங் ரோடு செல்லும் பாதையில் சென்றது. இந்த லாரியை பாளையங்கோட்டை டிரைவர் தங்கராஜ் (37) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி அதிவேகமாக வந்து கப்பலுார் மேம்பாலத்தில் ரிங் ரோடு செல்லும் பாதையில் திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. ரோட்டோர தடுப்புகளை உடைத்துக் கொண்டு லாரியும், கன்டெய்னரும் தனித்தனியாக பிரிந்து கவிழ்ந்து விழுந்தன. இதில் டிரைவர் தங்கராஜ் காயமடைந்ததால் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து ஏற்பட்ட போது நல்வாய்ப்பாக எந்த வாகனங்களும் வராததால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தேசிய நெடுஞ்சாலை ஆணைய நெடுஞ்சாலை விபத்து மீட்பு பிரிவினர், போலீசார் உடனே கவிழ்ந்த லாரியையும், கன்டெய்னரையும் கிரேன் உதவியோடு மீட்டு அப்புறப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Similar News