நாகை நீலா தெற்கு வீதியில் அமைந்துள்ள அருள்மிகு வீர விநாயகர், கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோவிலில்

பங்குனி உத்திர பிரமோத்சவ ஆராட்டு விழா துவஜாரோகனம் திருக்கொடியேற்றம்;

Update: 2025-04-02 06:12 GMT
நாகை நீலா தெற்கு வீதியில், அருள்மிகு வீர விநாயகர், கிழக்கு சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பங்குனி உத்திர பிரமோத்சவ ஆராட்டு விழா, நேற்று விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி ஆகியவற்றுடன் தொடங்கியது. இன்று (2-ம் தேதி) காலை ரிஷப லக்னத்தில் துவஜாரோகனம் என்ற திருக்கொடி ஏற்றப்பட்டது. விழாவில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை (3-ம் தேதி) முதல் வருகிற 10-ம் தேதி வரை யாக பூஜை, மணிகண்டன் புறப்பாடு நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஸ்ரீ சட்டநாதர் தீர்த்தத்தில், மணிகண்டன் ஆராட்டு வைபவம் வருகிற 11- ம் தேதி காலை நடைபெற உள்ளது. இரவு 7 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க திருவீதி உலா நடைபெற உள்ளது. பின்னர் துவஜா அவரோகணம் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை, பரம்பரை அறங்காவலர் சபரிநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Similar News