காங்கேயத்தில் அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
காங்கேயத்தில் அரசு ஊழியர் சங்கம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை எதிர்த்து ஆர்ப்பாட்டம்;
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் லால்ரின்டிகி பச்சாவை கண்டித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் காங்கேயம் வட்டக்கிளை சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட் டம் நேற்று தாசில்தார் அலுவலகத்தின் முன்பு நடைபெற்றது. காங்கேயம் வட்டக்கிளை தலைவர் ரவி தலைமை தாங்கினார். காங்கேயம் வட்டக்கிளை செயலாளர் ஆர்.முத்துச்சாமி விளக்கவுரை ஆற்றினார். மாவட்ட அரசு ஊழியர் சங்க இணைச் செயலாளர் ராணி, காங்கேயம் வட்டக் கிளை துணைத்தலைவர் மணிவேல், வட்ட கிளை நிர்வாகிகள், ஊழியர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி துறை, வருவாய் துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.