மத்திய சிறை வளாகத்தில் கஞ்சா வீசி சென்ற கும்பல்: போலீசார் விசாரணை
மத்திய சிறை வளாகத்தில் கஞ்சா வீசி சென்ற கும்பல் போலீசார் விசாரணை;

திருவள்ளூர் மாவட்டம், புழல் விசாரணை சிறை தண்டனை சிறை மற்றும் மகளிர் சிறை என மூன்று சிறைகள் உள்ளது இதில் சுமார் 150 பெண் கைதிகள் உள்ளிட்ட நாலாயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர் இந்நிலையில் சிறையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு நிலையில் சிறைக்குள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் அதிக அளவில் நடமாட்டம் உள்ளது இதை அவ்வப்போது சிறை காவலர்கள் சோதனை செய்கின்றபோது பல நேரங்களில் பதிக்க வைக்கப்பட்டிருந்த செல்போன்கள் கஞ்சா பீடி ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர் இந்நிலையில் நேற்று மாலையில் சிறையில் வெளியில் உள்ள சுற்று அருகில் பந்து வடிவிலான ஒரு பொருள் இருந்ததைப் பார்த்த சிறை காவலர் ஒருவர் அதை பிரித்து பார்க்க போது அதில் 18 கிராம் கஞ்சா இரண்டு லைட்டர்கள் மூன்று பீடி கட்டு இருந்தது அதிகாரி புழல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் வெளியில் உள்ள சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிள் வந்த இருவர் இந்த போதைப்பொருட்களை வீசி உள்ளதாக தெரிய வந்துள்ளது இதுகுறித்து சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து போதைப்பொருட்கள் வீசிய நபர்களை தேடி வருகின்றனர்