ரத்த தானம் செய்த நபருக்கு பாராட்டு
73 வது முறையாக இரத்தம் தானம் செய்த தொடர் குருதி கொடையாளர் மகேஷ் குமாருக்கு சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் என பல்வேறு துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்;

73 வது முறையாக இரத்தம் தானம் செய்த தொடர் குருதி கொடையாளர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பெரம்பலூரைச் சேர்ந்த ஒரு நபரின் அறுவை சிகிச்சைக்கு . பெரம்பலூர் க.மகேஸ்குமரன், ஓ-பாசிடிவ் வகை இரத்தம் கொடை வழங்கி உதவினார். இது இவரின் 73 வது முறை இரத்த தானம் ஆகும். பெரம்புலூர் உதிரம் நண்பர்கள் மற்றும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை தலைவர் ஜெயராமன், ஆற்றும் கரங்கள் இல்ல நிர்வாகி அருண் ஆப்ரஹாம், குருதி ஏற்பாட்டாளர் உதிரம் நாகராஜ் , குருதி கொடையாளர் சபரி துரைராஜ், செங்குணம் அய்யாவு உட்பட பலரும் பாராட்டி வாழ்த்தினார்.