சத்துணவு பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்
சத்துணவு பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்;
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவிலான சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப.இன்று 03.04.2025 துவக்கி வைத்து சிறுதானிய உணவு சிறப்பாக காட்சிபடுத்திய சத்துணவு பணியாளர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) எஸ்.ஹரிஹரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) முனிராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட சமூக நல அலுவலர் சக்தி சுபாஷினி உள்ளிட்ட பலர் உள்ளனர்.