கம்பம் அருகே சுருளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (21). இவர் நேற்று முன் தினம் இரவு தனது இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது பைக்கில் மறைந்திருந்த பாம்பு இவரை தீண்டி உள்ளது. கம்பம் மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்துவிட்டு மேல் சிகிச்சைக்காக தேனி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் ஹரிகிருஷ்ணன் உயிரிழந்தார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்கு (ஏப்.3) பதிவு.