காவேரிப்பட்டணம்: கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்
காவேரிப்பட்டணம்: கற்கள் கடத்திய டிராக்டர் பறிமுதல்;
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்துள்ள ஜெகதாப் வி. ஏ. ஓ. அண்ணாமலை மற்றும் அலுவலர்கள் நேற்று முன்தினம் ஆத் தோரத்தான்கொட்டாய் பகுதி அருகே ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு டிராக்டரை சோதனை செய்த போது, ஒரு யூனிட் கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து வி. ஏ. ஓ. காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கற்களை கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.