பொற்பதிந்த நல்லூர் ஊராட்சியில் தண்ணீர் பந்தல் திறப்பு அமைச்சர் பங்கேற்பு
பொற்பதிந்தநல்லூர் ஊராட்சியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் தண்ணீர் பந்தலை போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார்.;

அரியலூர், ஏப்.6- ஜெயங்கொண்டம் அருகே ,தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழ்நாடு முதலமைச்சரின் 72 - வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு பொற்பதிந்த நல்லூர் ஊராட்சி சிலால், அணைக்குடம் உள்ளிட்ட பகுதிகளில் ,கோடைகால தண்ணீர் பந்தலை,ஒன்றிய செயலாளரும் ஜெயங்கொண்டம் எம் எல் ஏவுமான க.சொ.க.கண்ணன் தலைமையில், மாவட்டசெயலாளரும், போக்குவரத்துத்துறை அமைச்சருமான சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நீர் மோர்,பழங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர்கள் க.சாமிதுரை, இந்துமதி நடராஜன்,அ.இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன்,சி.கண்ணதாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் இரா.சங்கர், த.குணசீலன்,க.நளராசன், நீல.மகாலிங்கம் மற்றும் கழக தோழர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.