சின்னமனூர் அருகே இருசக்கர வாகன விபத்து முதியவர் உயிரிழப்பு

வழக்குப்பதிவு;

Update: 2025-04-06 13:36 GMT
சின்னமனூர் அருகே அபிபட்டியை சேர்ந்தவர் செல்லத்துரை (60). இவர் கடந்த 2-ம் தேதி அவரது வாகனத்தில் சென்ற போது மாரீஸ்வரன் என்பவர் ஒட்டி வந்த பைக் இவரது பைக் மீது மோதியது. இதில் செல்லத்துரை படுகாயம் அடைந்த நிலையில் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்.5) உயிரிழந்தார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Similar News