அன்னதானத்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ
மதுரை சோழவந்தான் கோவிலில் அன்னதானத்தை எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.;

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருள்மிகு ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவின் மூன்று மாத கொடியேற்றம் கடந்த 31ஆம் தேதி நடைபெற்றது. தற்போது பிரமோற்சவ விழாவில் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. தொடர்ச்சியாக, சோழவந்தான் மற்றும் குருவித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள திருக்கோவில்களில் திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், இந்த கோவில்களில் சாமி தரிசனம் செய்து இன்று (ஏப்.8) அன்னதானத்தை தொடங்கி வைத்தார். சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் மற்றும் ஜெனக நாராயண பெருமாள் கோவிலில்.எம் எல். ஏ. விற்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்தனர். தொடர்ந்து, குருவித்துறை சித்திரை ரத வல்லப பெருமாள் கோவிலில் உள்ள பெருமாள் சந்ததி குரு பகவான் சன்னதி ஆகியவற்றில் சாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடைபெற்ற அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிகளில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளர் பசும்பொன்மாறன், சோழவந்தான் பேரூராட்சித் தலைவர் எஸ். எஸ். கே. ஜெயராமன்,பேரூர் செயலாளர் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ், வாடிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பால ராஜேந்திரன், வாடிப்பட்டி பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.