ஓசூர்: தொல்லியல் மரபு பயணத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்பு.

ஓசூர்: தொல்லியல் மரபு பயணத்தில் மாணவ மாணவிகள் பங்கேற்பு.;

Update: 2025-04-09 02:29 GMT
தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவுறுத்தலின்படி, தமிழகத்தில் தொல்லியல் மரபு நடை சார்ந்த பணிகள் மேற்கொள்ள 110 அரசுப்பள்ளிகளில் தொல்லியல் மரபு மன்றங்கள் தொடங்கப்பட்டு, பள்ளிக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் தமிழக அரசு நிதி வழங்கபட்டுள்ளது. இதில் ஓசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் 210 மாணவ மாணவிகள், 40 ஆசிரியர்கள் தொல்லியல் மரபு பயணம் மேற்கொண்டனர்.

Similar News