சர்க்கரை நோயாளி பெண் திடீர் பலி

குமாரபாளையத்தில் சர்க்கரை நோயாளி பெண் திடீர் பலியானார்.;

Update: 2025-04-10 09:55 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவேரி வீதி பகுதியை சேர்ந்தாவ்ர் பாப்பாத்தி, 65. கடந்த 15 ஆண்டுகாலமாக சர்க்கரை நோயால் பாதிக்க பட்டு வந்தார். இவருக்கு நேற்றுமுன்தினம் மதியம் 12:30 மணியளவில் திடீரென்று மயக்கம் வந்தது. இவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவரை பரிசோத்தித்த டாக்டர் இவர் வழியில் இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News