தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவர் செல்வராஜ் என்பவரிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றுள்ளார். இந்த நிலையில் முத்துக்கிருஷ்ணன் வீட்டிற்கு சென்ற தமிழக மக்கள் முன்னேற்ற கழக தேனி மேற்கு மாவட்ட செயலாளர் தில் பிரசாத் உள்ளிட்ட ஒன்பது பேர் கத்தியை காட்டி பணத்தை திருப்பி தர கூறி மிரட்டி உள்ளனர் இது குறித்த புகாரில் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தில் பிரசாத்தை நேற்று கைது செய்தனர்