பழனிசெட்டிபட்டியை சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவரும் கல்லூரியில் பணியாற்றும் மற்றொரு பெண்ணும், கல்லூரி செல்ல பஸ் நிறுத்தத்தில் நேற்று முன் தினம் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வினோத்குமார் (20) என்பவர் இளம் பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். அதனை கல்லூரி மாணவி தட்டி கேட்ட நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் போலீசார் வினோத்குமாரை கைது (ஏப்.10) செய்தனர்.